33 ஆண்டுகளாக முப்படை வசமிருந்த மக்கள் காணிகளில் 67 ஏக்கர் நிலப்பரப்பு இன்று மக்களிடம் கையளிக்க ஏற்பாடு:

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பகுதியில் ராணுவத்தினர் வசமுள்ள பெருந்தொகை காணிகளில் ஒரு சிறு தொகுதியாக 67 ஏக்கர் காணிகளை iஉரிமையாளர்களிடம் கையளிக்கப்படவுள்ளது

சுமார் 33 வருடகாலமாக ராணுவத்தின் உயர்பாதுகாப்பு வலயமாக காணப்பட்ட குறித்த காணிகளே இவ்வாறு தேர்தலை மையப்படுத்தி விடுவிக்கப்படவுள்ளது

இதற்கமைய காங்கேசன்துறை தெற்கு பகுதியில் 235 கிராம சேவகர் பிரிவில் 20.3 ஏக்கர் காணிகளும்.வறுத்தலைவிளானில் 241 கிராம சேவகர் பிரிவில் 23 ஏக்கர் காணிகளும் விடுவிக்கப்படவுள்ளது

மேலும் மயிலிட்டி தெற்கில் 240 கிராமசேவகர் பிரிவில் 24 ஏக்கர் காணிகளும் விடுவிக்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது

இதேவேளை விடுவிக்கப்படவுள்ள காணிகளின் உரிமையாளர்கள் நாளைய தினம் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திற்கு வருகைதருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *