போதைப்பொருட்களுடன் 720 பெண்கள் கைது!

நாடளாவிய ரீதியில் நேற்று (22) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 720 பெண்களும் 13 ஆண்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 19 பேர் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். 

போதைப்பொருட்களுக்கு அடிமையாகவுள்ள 11 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது சந்தேக நபர்களிடமிருந்து 152 கிராம் ஹெரோயின்,1133 கிராம் ஐஸ்,379 கிராம் கஞ்சா,16 கிராம் ஹெரோயின் மற்றும் 389 கிராம் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *