நீதிமன்றத்தில் இருந்த வழக்குப் பொருட்கள் திருட்டு: அலுவலக உதவியாளர் கைது !

வெல்லவாய நீதிமன்ற வளாகத்தில் உள்ள வழக்கு பொருட்களை வைக்கும் அறையிலிருந்து 171 கிலோ 285 கிராம் கஞ்சா மற்றும் துப்பாக்கி உள்ளிட்ட பொருட்களை திருடியதாக கூறப்படும் வெல்லவாய நீதிமன்ற அலுவலக உதவியாளர் ஒருவர் வெல்லவாய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கொஸ்லந்த 43 வயதுடைய நபராவார்.

திருடப்பட்ட கஞ்சா தொகையின் மதிப்பு ஒரு கோடியே இரண்டு இலட்சம் என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், சந்தேக நபரால் திருடப்பட்டதாக கூறப்படும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டு நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *