கொழும்பின் சில பகுதிகளுக்கு நாளை 15 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடை!

அத்தியாவசிய பணிகள் காரணமாக கொழும்பின் சில பகுதிகளுக்கு நாளை 15 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, நாளை சனிக்கிழமை மாலை 5 மணி முதல் நாளை மறுதினம் காலை 8 மணி வரை நீர் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் கொழும்பு 11, 12, 13 ஆகிய பகுதிகளுக்கும், கொழும்பு 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கும் இந்த காலப்பகுதியில் நீர் விநியோகம் தடைப்படும் என நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக தேவையான நீரை சேமித்து வைக்குமாறு நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *