கனடா – ஒன்ராறியோ மாகாணத்தில் குடியிருப்பு ஒன்றில் சடலமாக மீட்கப்பட்ட இந்தியர்!

ஒன்ராறியோ மாகாணத்தில் – வாகன் பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றில் சடலமாக மீட்கப்பட்ட 50 வயது நபர் தொடர்பில் சாட்சிகளை தேடி வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

யோர்க் பிராந்திய பொலிசார் செப்டம்பர் 1ம் திகதி தெரிவிக்கையில், அப்பகுதி மக்கள் குறித்த தகவலை அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியதாகவும், அந்த நபரின் சடலம் குடியிருப்புக்குள் காணப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில், அந்த நபருக்கு 50 வயது எனவும் ராகேஷ் ஜோஷி என்ற இந்தியர் எனவும் தெரியவந்துள்ளது. அவரது மரணத்தை படுகொலையாக கருதியே விசாரணை முன்னெடுப்பதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

மேலும், இந்த விவகாரத்தில் இதுவரை சந்தேக நபர்கள் தொடர்பில் உறுதி செய்யவில்லை என்றே பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.

மட்டுமின்றி, இந்த விவகாரத்தில் தகவல் தெரியவரும் பொதுமக்கள், அல்லது காணொளி காட்சிகள் பதிவு செய்தவர்கள் உடனடியாக அதிகாரிகளை தொடர்பு கொள்ளவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *