எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு அருகாமையில் மாவீரர்களுக்கு மக்கள் அஞ்சலி:

யாழ்ப்பாணம் – வடமராட்சி, எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு அருகாமையில் மாவீரர் நாள் நிகழ்விற்காக பிரத்தியேகமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்தில் மக்கள் ஒன்று கூடி மாவீரர்களுக்கு தமது அஞ்சலிகளை செலுத்தினர்.

நிகழ்வில் பொதுச்சுடரினை மாவீரர்ரான கடற்கரும்புலி தமிழினியின் தந்தை திரு. முத்துலிங்கம் சிவப்பிரகாசம் அவர்கள் ஏற்றிவைத்தார்.

அதனைத் தொடர்ந்து மாவீரர் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், பொது மக்கள் என அனைவருமாக மாவீரர்களுக்கு மலர்தூவி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *