இந்திய இராணுவம் மேற்கொண்ட பிரம்படி படுகொலையின் 36ம் ஆண்டு நினைவு இன்று!

1987 ஆம் ஆண்டு இதே மாதம் பதினோராம் பன்னிரண்டாம் திகதிகளில் கொக்குவில் பிரம்படி பகுதியில் 50 இற்கும் மேற்பட்ட பொது மக்களை கொடூரமாக இந்திய இராணுவம் படுகொலை செய்திருந்ததன் 36 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (12) முன்னெடுக்கப்பட்டது.

இன்றைய தினம் (12) வியாழக்கிழமை பிரம்படி பகுதியில் வீதியயோரமாக அமைந்துள்ள நினைவு தூபி முன்பாக முன்னெடுக்கப்பட்டது. இதன்போது  இறந்தவர்களின் உறவுகள் மற்றும் பொதுமக்கள், அரசியல் கட்சிகளை சேர்ந்தோரால் சுடரேற்றி மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு நினைவு கூரப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *