ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புவி சுற்றுப்பாதை நான்காவது முறையாகவும் உயர்த்தப்பட்டுள்ளது!

சூரியனின் புறவெளியை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புவி சுற்றுப்பாதை நான்காவது முறையாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

குறைந்தபட்சம் 256 கிலோ மீட்டர் தொலைவிலும் அதிகபட்சமாக ஒரு இலட்சத்து 21 ஆயிரத்து 973 கிலோ மீட்டர் தொலைவிலும் ஆதித்யா விண்கலம் இயங்கி வருவதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மொரீஷியஸ், பெங்களூரு மற்றும் போர்ட் பிளேர் தரைக்கட்டுப்பாட்டு நிலையங்களில் இருந்து ஆதித்யாவின் பயணத்தை விஞ்ஞானிகள் கண்காணித்து வருகின்றனர்.

எதிர்வரும் 19ஆம்; திகதி அதிகாலை 2 மணிக்கு அடுத்தகட்ட சுற்றுப்பாதை உயர்த்தும் பணிகள் இடம்பெறும்; எனவும், பூமியின் சுற்றுப்பாதையில் நிறைவுபெற்று ஆதித்யா விண்கலம் லக்ராஜியன் புள்ளியை நோக்கி பயணத்தைத் தொடரும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *