வைத்தியர்களின் வெளியேற்றத்தால் மூடப்பட்ட 40 மருத்துவமனைகள்!

கடந்த 2023 ஆம்  ஆண்டு முதல்  இதுவரையான காலப் பகுதி வரை 1,500 வைத்திய நிபுணர்கள் மற்றும் மருத்துவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர்.

மேலும் 5,000க்கும் அதிகமானோர் வெளிநாடு செல்வதற்கு தேவையான தகைமைகளை பூர்த்தி செய்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் டாக்டர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

வைத்தியர்களின் வெளியேற்றம் காரணமாக தற்போது 40க்கும் மேற்பட்ட சிறிய மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *