யாழ்-திருநெல்வேலியில் விடுதியிலிருந்து சிறுமி சடலமாக மீட்பு!

யாழில் திண்ணைவேலி என அறியப்பட்ட திருதிருநெல்வேலியில் விடுதியிலிருந்து சிறுமி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலிப் பகுதியில் உள்ள தனியார் விடுதியொன்றிலிருந்தே நேற்று மதியம் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்த சிறுமி திருகோணமலையைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சிறுமியுடன் அறையில் தங்கியிருந்த பேத்தியார் மயக்க நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

மேலும் சிறுமி 3 நாட்களுக்கு முன்னரே இறந்து விட்டார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது, சம்பவம் தொடர்பில் யாழ் மாவட்ட நீதிவான் நேரில் சென்று பார்வையிட்டார். மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *