யாழில் கைக்குண்டுடன் இளைஞன் கைது!

யாழ்ப்பாணம் – இளவாலை பகுதியில்  கடந்த 14 ஆம் திகதி கைக்குண்டுடன் கைது செய்யப்பட்ட இளைஞனுக்கு இராணுவ சிப்பாய் ஒருவரே கைக்குண்டை வழங்கியதாக  பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

கைது செய்யப்பட்ட இளைஞனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்த போது , பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடையமை தெரிய வந்ததையடுத்து  அவர் வைத்திருந்த கைக்குண்டை இராணுவ சிப்பாய் ஒருவரே தனக்கு வழங்கியதாகவும்  சந்தேக நபர் பொலிஸாரிடம் தெரிவிதுள்ளார் . 

அதுமாத்திரமின்றி கைது செய்யப்பட்ட இளைஞனால் திருடப்பட்ட பொருட்களை  வாங்கிய குற்றச்சாட்டில் நேற்று திங்கட்கிழமை (15)  சாவகச்சேரி பகுதியை சேர்ந்த மற்றுமொரு இளைஞனை பொலிஸார் கைது செய்தனர். 

அத்துடன் திருடப்பட்ட  இலத்திரனியல் பொருட்களை பொலிஸார் கைப்பற்றியதுடன் இருவரையும் பொலிஸ் நிலையத்தில்  தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *