மீனவர்களுக்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் மானியத்திற்காக அடுத்த 5 மாதங்களுக்கு மாதாந்தம் 9,375 ரூபாய் வழங்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தில் பதிவுசெய்யப்பட்ட விரைவு சிறிய மீன்பிடி படகுகளுக்கு இந்த மானியம் வழங்கப்பட உள்ளது.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
மீனவர்களுக்கு இதற்கு முன்னர் வழங்கப்பட்ட மண்ணெண்ணெய் மானியத்தை எளிதாக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை, எதிர்வரும் காலத்திற்கும் டீசல் மானியம் லீட்டருக்கு 25 ரூபா வழங்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
பொருளாதார நெருக்கடியால் மீனவர்கள் சந்தித்து வரும் சிரமங்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் கடந்த ஒக்டோபர் 1ம் திகதி முதல் டீசல், மண்ணெண்ணெய் மானியம் வழங்கும் நடவடிக்கையை அரசாங்கம் ஆரம்பித்திருந்தது.
இதன்போது, டீசல் மானியம் லீட்டருக்கு 25 ரூபாவும், மண்ணெண்ணெய் லீட்டருக்கு 25 ரூபாவும் அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 15 லீட்டர் என்ற அடிப்படையில் ஒரு மாதத்தில் 25 நாட்களுக்கு வழங்கப்பட்டது.
இந்த மானியம் நடைமுறையில் இருந்த போது இனங்காணப்பட்ட குறைபாடுகளுக்கு அமைவாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட புதிய மானிய முறைமைக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது.