மாங்குளம் காட்டில் விறகு பொறுக்கச் சென்ற இருவர் வெடி விபத்தில் சிக்கி படுகாயம்!

மாங்குளம் பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் படுகாயமடைந்த இருவர் மாங்குளம் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

மாங்குளம் நீதிபுரம் பகுதியை சேர்ந்த இருவரும் விறகு சேகரிப்பதற்காக சென்றிருந்த போதே குறித்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது

குறித்த சம்பவத்தில் பார்த்தீபன் நிதர்சன் (06) மற்றும் மாரிமுத்து மணியம் (84 ) ஆகிய இருவருமே படுகாயமடைந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *