திலீபனின் ஊர்தியை வழிமறித்து தாக்குதலில் ஈடுபட்டோரில் 6 பேர் பொலிஸாரால் கைது!

திருகோணமலை சாரதாபுர பிரதேசத்தில் கிழக்கிலிருந்து வடக்கு நோக்கி பயணிக்கவிருந்த திலீபன் நினைவு வாகன ஊர்வலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வழிமறித்து தாக்குதலில் ஈடுபட்ட 6 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உட்பட 14 பேரை காயப்படுத்தியமை மற்றும் வாகனத்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் திருகோணமலை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினரும், திருகோணமலை தலைமையகப் பொலிஸாராலும் இணைந்து கைது செய்யப்பட்டவர்களை இன்று (திங்கட்கிழமை) அடையாள அணிவகுப்புக்காக திருகோணமலை மேல் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 

இவர்களில் நான்கு ஆண்களும் இரண்டு பெண்களும் அடங்குவர் என்றும், 6 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *