எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் யாழ் மாவட்டத்தில் தமிழ் மக்கள் கூட்டணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் விவரம் வெளியாகியுள்ளது.
அக் கட்சியின் தலைவரும், முன்னாள் வடமாகாண முதலமைச்சரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான விக்னேஸ்வரன் அவர்கள் இம்முறை இளையோருக்கு முன்னுரிமை வழங்கி தான் தேர்தலில் இருந்து ஒதுங்கி இருக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்திருந்த நிலையில் இம்முறை வேட்பாளர்களின் பெயர்கள் வெளிவந்துள்லது.
அதன்படி, .தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்பாளர் பட்டியலில் வி.மணிவண்ணன், வ.பார்த்தீபன், செல்டன் (யாழ் மத்திய கல்லூரி கிரிக்கெட் பயிற்சியாளர்), சிற்பரன், ஜெனிட்டன் (கோப்பாய் – விளையாட்டு உத்தியோகத்தர்), உமாகரன் இராசையா, மிதிலைச்செல்வி (முன்னாள் தமிழரசுக் கட்சி மகளிர் அணி உறுப்பினர்), கோகிலவாணி (கிளிநொச்சி), சாவகச்சேரியைச் சேர்ந்த தனியார் நிறுவனமொன்றின் பிராந்திய முகாமையாளர் ஆகியோர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.