ஜனாதிபதி தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்துவதற்கு சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் தீர்மானம்:

ஜனாதிபதி தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்துவதற்கு சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், மதத் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.

குறித்த ஒன்று கூடல் அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் தலைமையில் வவுனியா புகையிரத வீதியில் அமைந்துள்ள RH விருந்தினர் விடுதியில், நேற்று நடைபெற்றது.

இந்த கலந்துரையாடலில், அகத்தியர் அடிகளார், திருகோணமலை வண. ஆயர் நொயல் இமானுவேல் வேலன் சுவாமிகள் உட்பட 48 சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், மத தலைவர்கள் கலந்து கொண்டிருந்தனர். இதன்போதே, ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *