ஜனாதிபதியால் மட்டக்களப்பு மாவட்ட செயலகம் திறந்து வைப்பு:

மட்டக்களப்பு திராய்மடுவில் 1055 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய மாவட்ட செயலகத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திறந்து வைத்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்த போது, 2016 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 11 ஆம் திகதி அப்போதைய உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன இந்த புதிய மாவட்ட செயலகத்தின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைத்தார்.

மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கான சேவைகளை விஸ்தரித்து வினைத் திறனாக்கும் நோக்கில் இந்த புதிய மாவட்ட செயலகம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. பெயர் பலகையை திரைநீக்கம் செய்து மாவட்ட செயலகத்தை திறந்து வைத்த ஜனாதிபதி, அங்கு கண்காணிப்பு விஜயத்தையும் மேற்கொண்டார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *