சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற பேரூந்து விபத்தில் சிக்கியதில் 21 பேர் உயிரிழப்பு!

வடக்கு இத்தாலியின் வெனிஸ் அருகே உள்ள மேம்பாலத்தில் இருந்து கேம்ப்கிரவுண்டிற்கு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேரூந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. 

குறித்த விபத்தில் 21பேர் உயிரிழந்துள்ளதோடு மேலும் 18பேர் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தானது ரயில் பாதைகளுக்கு அருகில் பேரூந்து சாலையை விட்டு விலகியதில் ஏற்பட்டுள்ளது.

மேலும் இந்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *