நல்லூர் ஆலயத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரிய பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் இன்று (03) வழிபாடுகளை மேற்கொண்டார்.
நேற்று (02) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் இன்று நல்லூர் ஆலயத்திற்குச் சென்று வழிபட்டார்.
இதன் போது பாராளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், பவானந்தராஜா ஆகியோர் வருகை தந்திருந்தனர்.