2025 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் வாரத்தில் மட்டும் 40,000 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அதன்படி, 2025 ஆம் ஆண்டில் இதுவரை நாட்டிற்கு வந்துள்ள மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 12 இலட்சத்தை தாண்டியுள்ளமை விசேட அம்சமாகும்.
சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, இதுவரை 1,204,046 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.
இதே நேரத்தில், 2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில் நாட்டின் சுற்றுலா வருவாய் 1.71 பில்லியன் அமெரிக்க டொலர் என்று இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.