சீரற்ற வானிலையால் 400 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு!

நாடு முழுவதும் தொடரும் சீரற்ற வானிலையால் 400 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, 416 குடும்பங்களைச் சேர்ந்த 1,520 நபர்கள் சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரம், 08 பேர் காயமடைந்தும் உள்ளனர்.

4 வீடுகள் முழுமையாகவும், 321 வீடுகள் பகுதி அளவிலும் சேதடைந்துள்ளன.

நாடு முழுவதும் தொடரும் சீரற்ற வானிலையால் யாழ்ப்பாணம், புத்தளம், ஹம்பாந்தோட்டை, காலி, களுத்துறை, கொழும்பு, இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களே பாதிக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *