நாடு முழுவதும் தொடரும் சீரற்ற வானிலையால் 400 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, 416 குடும்பங்களைச் சேர்ந்த 1,520 நபர்கள் சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேநேரம், 08 பேர் காயமடைந்தும் உள்ளனர்.
4 வீடுகள் முழுமையாகவும், 321 வீடுகள் பகுதி அளவிலும் சேதடைந்துள்ளன.
நாடு முழுவதும் தொடரும் சீரற்ற வானிலையால் யாழ்ப்பாணம், புத்தளம், ஹம்பாந்தோட்டை, காலி, களுத்துறை, கொழும்பு, இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களே பாதிக்கப்பட்டுள்ளன.