முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் 10வது தொகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய நபர், நேற்று (22) மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
நபர் ஒருவர் புதரில் கிடப்பதாக புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் குறித்த இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
அவரது சடலம் தற்போது புதுக்குடியிருப்பு வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.