இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்கு தனது ஆதரவை வழங்குவதற்காக MAG மற்றும் HALO அறக்கட்டளையுடன் இணைந்து இந்த புதிய இரண்டு திட்டங்களுக்கும் மொத்தமாக 900,000 US$ (சுமார் ரூ. 270 மில்லியன்) ஜப்பான் அரசாங்கம் வழங்கியுள்ளது.
2002 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்கு ஜப்பான் நன்கொடை அளித்து வருகிறது, மேலும் ஜப்பானின் மொத்த உதவித் தொகை 47 மில்லியன் அமெரிக்க டாலர்களைத் தாண்டியுள்ளது.
KAMOSHIDA Naoaki Chargé d’ Affaires ad interim, கண்ணிவெடி ஆலோசனைக் குழு (MAG) மற்றும் ஹாலோ அறக்கட்டளையுடன் (Halo Trust) அடிமட்ட மனித பாதுகாப்பு திட்டங்களுக்கான உதவி (GGP)” திட்டத்தின் கீழ் இரண்டு கண்ணிவெடி அகற்றும் திட்டங்களுக்கான மானிய ஒப்பந்தங்களில் மே 30, 2025 அன்று கையெழுத்திட்டார்.
MAG மற்றும் HALOவின் இந்தத் திட்டங்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மொத்தம் 13,000 பயனாளிகளுக்கு மீள்குடியேற்றம் மற்றும் மேம்பட்ட வாழ்வாதார உதவிக்கு பங்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு யுத்ததால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் அபிவிருத்தி இலங்கைக்கான ஜப்பானின் உத்தியோகபூர்வ அபிவிருத்தி உதவி முன்னுரிமைப் பகுதிகளில் ஒன்றாகும்.
இலங்கையில் அமைதியைக் கட்டியெழுப்புதல், மீள்குடியேற்றம் மற்றும் நிலையான வளர்ச்சியை நோக்கிய ஒரு அடிப்படை படியாக கண்ணிவெடி அகற்றலை ஜப்பான் கருதுகிறது என்று KAMOSHIDA வலியுறுத்தினார். ஜப்பானின் தொடர்ச்சியான ஆதரவிற்கான வலுவான உறுதிப்பாட்டை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார், மேலும் 2027 ஆம் ஆண்டுக்குள் இலங்கை கண்ணிவெடி பாதிப்பு இல்லாத நாடாக மாறும் என்றும், இது நீடித்த அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கு வழி வகுக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.