ரணிலுக்கு ஆதரவாக கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் குவிந்த மக்கள் !

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான வழக்கு இன்று (26) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இதனையடுத்து ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி பொது மக்கள் குவிந்துள்ளமையால் நீதிமன்ற வளாகத்தை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை எதிர்க்கட்சியினர் முன்னெடுக்கும் ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பின் பல வீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

அதன்படி, கொழும்பு கோட்டையிலிருந்து லேக் ஹவுஸ் சுற்றுவட்டம் மற்றும் கொம்பனித்தெரு வரையிலான பல வீதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *