யாழ். நாகவிகாரையில் பிக்கு ஒருவர் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா சென்ற பிக்கு ஒருவர் நேற்றிரவு உறக்கத்துக்கு சென்ற நிலையில் இன்று (01) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

பதுளை வீதி, பசறை பகுதியைச் சேர்ந்த வனபதுலே சரணஹர தேரர் (வயது 72) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த பிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் சுற்றுலா பயணத்தை மேற்கொண்டு யாழ்ப்பாணம் சென்றுள்ளார். 

இந்நிலையில் நேற்று முன்தினம் சில இடங்களை சுற்றிப்பார்த்த பின்னர் நாகவிகாரைக்கு சென்று அங்கு இரவு உறக்கத்திற்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் இன்று காலை அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *