2009 ஆம் ஆண்டு யுத்த காலத்தில் இலங்கை இராணுவத்தினரால் கொத்து கொத்தாக படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவு கூர்ந்து தமிழினப்படுகொலையின் நினைவு நாளாக “மே18” உல்கெங்கும் வாழும் தமிழர்களால் கடைப்பிடிக்கப்பட்டுவரும் நிலையில் அந்த பேரழிவு அரங்கேறிய அதே இடமான “முள்ளிவாய்க்கால் பகுதியில்” இன்று பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடி உணர்வுபூர்வமாக தங்கள் உறவுகளை நினைவுகூர்ந்தனர்.
காலை 10.15 மணிக்கு தவத்திரு அகத்தியர் அடிகளாரால் கொள்கைப்பிரகடனம் வாசிப்புடன் ஆரம்பமாகிய குறித்த நிகழ்வில் காலை 10.29 க்கு நினைவொளி சத்தம் எழுப்பபட்டு 10.30 க்கு அகவணக்கமும் அதனை தொடர்ந்து பொதுச்சுடரை இறுதி யுத்தத்தில் மனைவியையும் இரண்டு பிள்ளைகளையும் இழந்த முள்ளிவாய்க்கால் மேற்கினை சேர்ந்த வீரசிங்கம் இராசேந்திரா அவர்களால் பொதுச் சுடர் ஏற்றப்பட்டு சமநேரத்திலே ஒற்றைச் சுடரொளி ஏற்றப்பட்டு இறுதியிலே மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.

