முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், நந்திக்கடலில் ஞாயிற்றுக்கிழமை (18.05.2025) மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
2009 ஆம் ஆண்டு இலங்கை பெளத்த சிங்கள பேரினவாத அரச படைகளால் ஈவிரக்கமின்றி நடாத்தப்பட்ட தமிழினப்படுகொலை முடிவு பெற்ற இடமாக நந்திக்கடல் அமையப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.