திருகோணமலையில் – பிரதேச சபை தவிசாளர் சடலமாக மீட்பு!

32 வயதான திருகோணமலை கோமரங்கடவல பிரதேச சபை தவிசாளர் பிரகாத் தர்மசேன இன்று (21) வயலில் சடலமாக மீட்கப்பட்டார்.

நேற்று மாலை வீட்டில் இருந்து தனது வயலுக்கு காவலுக்குச் சென்றவர் வீடு திரும்பாத நிலையில் அங்கு சென்றபோது உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

இவர் கோமரங்கடவல பிரதேச சபையில் NPP கட்சியில் போட்டியிட்டு அதிக வாக்குகளை பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *