இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ள கெஹல்பத்தர பத்மே உள்ளிட்ட பாதாள உலகக் குழுவினரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது விசேட அதிரடிப்படையினர், அரசியல்வாதிகள், பொலிஸார் சம்பந்தப்பட்டுள்ளதாக பொலிஸ் குற்றப்பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர் ரொஹான் ஒலுகல தெரிவித்துள்ளார்.
அதற்கான ஆதாரங்களைக்கொண்டு விசாரணை நடைபெறுவதோடு, அதற்கான இரசாயன ஆராச்சிகளும் நடைபெறுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொலிஸ் மாஅதிபரின் பணிப்புரைக்கமைவாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் பஸ்தேவா என்ற சந்தேகநபர் ஒருவர் தாய்லாந்து செல்லும் போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.