Home தாயக செய்திகள் ஏப்ரல் 5 முதல் 16 வரை பாடசாலை விடுமுறை!

ஏப்ரல் 5 முதல் 16 வரை பாடசாலை விடுமுறை!

13
0

2023 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை பாடசாலை விடுமுறைகள் ஏப்ரல் 5 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை வழங்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அதேவேளை, 2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்காக மே 13 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை மீண்டும் விடுமுறை அளிக்கப்படும் எனவும் அறிவித்துள்ள கல்வி அமைச்சு, தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த உயர்தர பரீட்சை காரணமாக இரண்டாம் தவணை விடுமுறை ஒக்டோபர் 14 முதல் நவம்பர் 12 வரை வழங்கப்படும் எனவும், மூன்றாம் தவணை விடுமுறை டிசம்பர் 23 முதல் 2024 ஜனவரி 1 வரை வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.