Home செய்திகள் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தினுள் ஊடுருவி இரகசிய தகவல்கள் திருட்டு!

பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தினுள் ஊடுருவி இரகசிய தகவல்கள் திருட்டு!

13
0

இலங்கை பாதுகாப்பு அமைச்சின் இரண்டு இணையத்தளங்கள் ஹக் செய்யப்பட்டு அதில் உள்ள மிகவும் இரகசியமான தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக சைபர் ஆபத்து தொடர்பான புலனாய்வு அமைப்பொன்று தெரிவித்துள்ளது.

ஹக் செய்யப்பட்டு அதில் காணப்பட்ட இரகசிய விபரங்கள் அனைத்தும் ஹக்கர் குழுவொன்றிற்கு விற்பனைக்கு வழங்கப்பட்டுள்ளதாக பல்கொன் பீட்ஸ் தெரிவித்துள்ளது.

ஹக்கர் குழு என தன்னை அழைத்து கொள்ளும் தரவு முகவர் கெவின் செக்கியுரிட்டி என்ற குழுவே இதனை செய்துள்ளதாகவும் மேலும் அதில் குறிப்பிட்டுள்ள புலனாய்வு அமைப்பு கொலம்பியா மெக்சிக்கோ சிலி ஆகிய நாடுகளிலும் இவ்வாறான நடவடிக்கைகளில் அக் குழு ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், இலங்கை பாதுகாப்பு அமைச்சின் ஊடக  பேச்சாளர் நளின் ஹேரத் இதனை நிராகரித்துள்ளதுடன் எந்த தகவல்களும் பறிபோகவில்லை எனவும், இணையத்தளத்தின் எந்த தரவும் விற்பனைக்காக வழங்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.