பனாங்கொட இராணுவ முகாமை அண்மித்த சோதனைச் சாவடியில் பாதுகாப்பு கடமையில் இருந்த இராணுவத்திரை ஏமாற்றி அவரிடமிருந்த ரி.-56ரக துப்பாக்கி உட்பட அதற்கு பயன்படுத்தப்படும் தோட்டாக்கள் மற்றும் மெகசின் ஆகியவற்றை திருடினர் என்றக் குற்றச்சாட்டின்க கீழ், பௌத்த பிக்கு உட்பட்ட இருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
கடந்த 3 ஆம் திகதி இரவு இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் T- 56 துப்பாக்கி ஒன்றும், 4 மகசின்கள், 120 தோட்டாக்கள் மற்றும் பாதுகாப்புப் பை என்பன திருடப்பட்டிருந்தன.
திருடப்பட்ட இடத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு பக்க சாலையில் உள்ள ஒரு கற்குகையின் கீழ் 30 திருடப்பட்ட தோட்டாக்கள் அடங்கிய ஒரு மெகசினை பொலிஸார் கண்டுபிடித்தனர்.
அதன்பின்னர் அருகில் உள்ள கடையொன்றில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கமெரா மூலம் சம்பவத்துடன் தொடர்புடைய நபர் அடையாளம் காணப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் மா அதிபரின் பணிப்புரையின் பேரில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த நிலையிலேயே தற்போது குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்படி பிக்குவும், மற்றுமொரு நபரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.