2023 ஆம் ஆண்டில் இரண்டு மாதங்களும் சில நாட்களும் கடந்துவிட்ட நிலையில் இக் காலப்பகுதியில் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பணி புறக்கணிப்பு காரணமாக நாம் சுமார் 500 மில்லியனை இழந்துள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (06) இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இதில் மேல் மாகாணத்திலேயே அதிக நஷ்டங்களை எதிர்கொண்டோம். இது தொடர்பில் மீண்டும் பொலிஸ் மா அதிபர் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு தெரியப்படுத்தி எதிர்வரும் ஜூலை மாதத்துக்குள் பொதுமக்களுக்கு பஸ் கட்டண நிவாரணத்தை வழங்க முடியும் என கருதுகிறேன். அவ்வாறு செய்ய முடியாவிட்டால், மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் பொலிஸாருக்கு எதிராக கண்டிப்பாக நீதிமன்றத்தை நாட வேண்டியிருக்கும்” என்றார்.