Home செய்திகள் கடலுக்குச் சென்ற மீனவர்கள்மீது தாக்குதல் – 1,000 கிலோ மீன்களும் கொள்ளை!

கடலுக்குச் சென்ற மீனவர்கள்மீது தாக்குதல் – 1,000 கிலோ மீன்களும் கொள்ளை!

14
0

கடலுக்குச் சென்ற மீனவர்கள்மீது 20 பேர் கொண்ட கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதுடன், அவர்களது 1,000 கிலோ மீன்களை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இரண்டு படகுகளில் வந்த கடற்கொள்ளையர் குழுவொன்றே       மீன்களை கொள்ளையிட்டுச்  சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வெலிகம, பத்தேவத்த மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற  லக்கிஷாப் என்ற மீன்பிடி படகிலிருந்த கடற்கரையிலிருந்து கடலின் சுமார் 6 மைல் தொலைவில் வைத்து இரண்டு படகுகளில் வந்த கடற்கொள்ளையர் குழு மீனவர்களை தாக்கிவிட்டு, மீகளையும் கொள்ளையிட்டு சென்றூள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது என  பொலிஸார் தெரிவித்தனர். 

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.