Home செய்திகள் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர், வீட்டில் சடலமாக மீட்பு!

ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர், வீட்டில் சடலமாக மீட்பு!

23
0

வவுனியா – குட்செட்வீதி, உள்ளக வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரின் சடலங்கள். பொலிசாரால் இன்று மீட்கப்பட்டமை பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவத்தில் அதேபகுதியை சேர்ந்த 42 வயதுடைய சிவபாதசுந்தரம் கௌசிகன், வீட்டின் விறாந்தை பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதுடன், அவரது மனைவியான 36 வயதுடைய வரதராயினி, இரு பிள்ளைகளான 9 வயதுடைய மைத்ரா, 3 வயதுடைய கேசரா ஆகியோர் உறங்கியபடியும் சடலமாக மீட்கப்பட்டனர்.

குறித்த வீட்டின் உரிமையாளருக்கு இன்றையதினம் அவரது நண்பர் ஒருவர் தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தியுள்ளார்.
எனினும் அவர் பதிலளிக்கவில்லை. இதனையடுத்து அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். இதன்போது குறித்த வீட்டினுள் குடும்பஸ்தர் அவரது சிறு வயதான இரு பிள்ளைகள், மனைவி ஆகியோர் மர்மமான முறையில் உயிரிழந்திருந்தமை கண்டுதிர்ச்சியடைந்த அவர் சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருவதோடு, மீட்கப்பட்ட சடலங்களை சட்ட வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.