இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள அரசு எரிபொருள் கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர்.
மேலும், குறித்த தீ விபத்தில் சிக்கி 60 பேர் பலத்த தீக்காயம் அடைந்துள்ள நிலையில் தீ விபத்து காரணமாக குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் நூற்றுக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டனர்.