பளை – கிளாலி பகுதியில் உள்ள தாமரைக்குளத்தில் இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கிளாலி பகுதியை சேர்ந்த 52 வயதுடைய மரியான் பீரிஸ் என்ற 2 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குளத்தில் நீராட சென்றவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக ஆரம்ப விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.