Home செய்திகள் அரசாங்கத்தின் நிதியைப் பயன்படுத்தி உல்லாசமாக உலா வந்தவர்களுக்கு விழுந்த பேரிடி!

அரசாங்கத்தின் நிதியைப் பயன்படுத்தி உல்லாசமாக உலா வந்தவர்களுக்கு விழுந்த பேரிடி!

26
0

வெளிநாட்டு பயணங்களுக்கான விமான பயணச் சீட்டுகளைக் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்தின் நிதியைப் பயன்படுத்தும் அரச உத்தியோகஸ்தர்கள் சாதாரண வகுப்பு (எகோனொமி கிளாஸ்) விமான டிக்கெட்களை மட்டுமே கொள்வனவு செய்ய வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.

அதேவேளை,, இந்த நடைமுறையை பிரதம நீதியரசர், உச்ச நீதிமன்ற நீதியரசர்கள், மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் பின்பற்ற தேவையில்லை எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அதிகாரி ஒருவர் வணிக வகுப்பில் (பிஸினஸ் கிளாஸ்) பயணம் செய்ய விரும்பினால், சாதாரண வகுப்பு விமான டிக்கெட்டின் விலைக்கும் வணிக வகுப்பு விமான டிக்கெட்டின் விலைக்கும் உள்ள வித்தியாச தொகையை தனது தனிப்பட்ட பணத்திலிருந்து செலவழித்து வணிக வகுப்பில் பயணம் செய்யலாம். எனவும் கூறினார்.

இது தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் கையொப்பமிடப்பட்ட 2023 பெப்ரவரி 22 ஆம் திகதி சுற்றறிக்கை பிரதமரின் செயலாளர், அமைச்சரவை செயலாளர், அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள், அனைத்து மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விதிகள் 2023 மார்ச் 01 முதல் நடைமுறைக்கு வருவதோடு இந்த விடயம் தொடர்பில் முன்னர் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைகள் அல்லது அறிவுறுத்தல் கடிதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள விதிகள், குறித்த திகதி முதல் செல்லுபடியாகாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.