தற்போதை சூழ்நிலையில் தேர்தலொன்றை நடத்துவதற்கு நாட்டின் பொருளாதாரம் சீராக இல்லையெனவும், தேர்தலுக்கான நிதி இல்லையெனவும் கடந்த டிசம்பர் 14ஆம் திகதியே தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவித்ததாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று பாராளுமன்றில் தெரிவித்தார்.
இன்று(23) நாடாளுமன்றில் விசேட உரையொன்றை நிகழ்த்தும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இதனூடாக உள்ளூராட்சிமன்ற தேர்தல் நடைபெறமாட்டாது என்பது உறுதியாகியுள்ளது.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், இன்று அத்தியாவசிய சேவைகள் தொடர்பில் வாக்களிப்புக்கு செல்வதாக எதிர்கட்சிகள் தீர்மானித்துள்ளன. ஏன் இவ்வாறு செய்கிறீர்கள்…? என தெரியவில்லை எனவும் கூறினார்.