அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள புதிய வரி திருத்த சட்டத்தை மீளப் பெற்று ஒரு வார காலத்திற்குள் எமக்கான தீர்வை வழங்கா விடின் நாடளாவிய ரீதியல் வேலை நிறுத்தப்போராட்டத்தை முன்னெடுக்கப்போவதாக பெற்றோலியம் , துறைமுகம் , மின்சாரம் , நீர் வழங்கல் , வங்கி , வைத்தியத்துறை மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட சுமார் 40க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து எச்சரிக்கை விடுத்துள்ளன.
இன்று (22) கொழும்பு – கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்திருந்த குறித்த தொழிற்சங்க உறுப்பினர்கள் கருப்பு கொடிகளை ஏந்தியவாறும் , கருப்பு பட்டிகளை அணிந்தவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அரசாங்கத்திற்கு ஒருவாரம் கால அவகாசம் வழங்குவதாகவும் , அதற்குள் தமக்கான தீர்வு கிடைக்கப் பெறாவிட்டால் மார்ச் முதலாம் திகதி நாடளாவிய ரீதியில் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும், அதன் பின்னர் தீர்வு கிடைக்கும் வரை தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் எச்சரித்தனர்.
இன்று தொழிற்சங்களினால் எச்சரிக்கை ஆர்ப்பாட்டமாக முன்னெடுக்கப்பட்டிருந்தமையால், நிர்வாக சேவைகள் எவையும் முடக்கப்படாமல் வைத்தியசாலைகள் உள்ளிட்ட ஏனையவற்றிலும் வழமையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தச்து.
இன்று முற்பகல் 11 மணி முதல் மாலை 7 மணி வரை ஜனாதிபதி அலுவலகம் , ஜனாதிபதி செயலகம் , நிதி அமைச்சு மற்றும் காலி முகத்திடல் பகுதி உள்ளிட்ட பகுதிகளுக்கு பிரவேசிப்பதற்கு 9 ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் அவர்களுடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளும் ஏனையோருக்கும் நீதிமன்றத்தினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. குறிப்பிடத்தக்கது.