Home தாயக செய்திகள் ஜனாதிபதியின் கைகளுக்கு செல்லும் அதிகாரம் – கலைக்கப்படுமா பாராளுமன்றம்…?

ஜனாதிபதியின் கைகளுக்கு செல்லும் அதிகாரம் – கலைக்கப்படுமா பாராளுமன்றம்…?

19
0
இன்று (20) நள்ளிரவுக்குப் பிறகு, எந்த நேரத்திலும் இலங்கை பாராளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு கிடைக்கவுள்ள நிலையில். பெப்ரவரி 21 ஆம் திகதிக்கு பின்னர் எந்த நேரத்திலும் கலைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசியலமைப்பின் 70 (1) உட்பிரிவின் பிரகாரம் ஜனாதிபதிக்கு பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ள போதும் . அரசியலமைப்பின் 70 (1) (அ) உறுப்புரையின் பிரகாரம், தற்போதைய பாராளுமன்றம் முதல் முறையாக கூடுவதற்கு நியமிக்கப்பட்ட திகதியிலிருந்து இரண்டு ஆண்டுகள் 6 மாதங்களுக்கு அதாவது 30 மாதங்களிற்கு மேற்பட்ட காலப்பகுதியில், பாராளுமன்றத் தீர்மானம் மூலம் ஜனாதிபதியினால் பாராளுமன்றத்தை கலைக்க முடியாது.
இதற்கமைய நாட்டின் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஆட்சிக்காலத்தில் 2020 மார்ச் பாராளுமன்றத் தேர்தலுக்கு அழைப்பு விடுத்தார். எனினும், கொவிட் -19 தொற்றுநோய் காரணமாக, 2020 ஆகஸ்ட் 5 குறித்த தேர்தல் நடைபெற்றது.
இதன்படி, ஏழாவது நிறைவேற்று ஜனாதிபதியான கோட்டாபாய ராஜபக்ஷவின் தலைமையில், ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஆரம்ப அமர்வு அந்த வருடம் ஆகஸ்ட் 20 ஆம் திகதி கூட்டப்பட்டது. 
குறித்த முதல் அமர்வு இடம்பெற்று இன்று (20-02-2023) நள்ளிரவுடன் இரண்டு வருடங்களும் ஆறு மாதங்கள் நிறைவடைகிற நிலையில் கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி விலகலின் பின்னர் அரசியலமைப்பு ரீதியாக ஜனாதிபதியான ரணில் விக்ரமசிங்கவுக்கு, அரசியலமைப்பின் 70 1 (அ) உறுப்புரையின் பிரகாரம் பாராளுமன்றை கலைக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.