Home செய்திகள் பாதுகாப்பு பேச்சுவார்த்தைகளுக்காக என அமெரிக்க உயர்மட்ட குழு ஒன்று இலங்கை வந்தடைந்தது!

பாதுகாப்பு பேச்சுவார்த்தைகளுக்காக என அமெரிக்க உயர்மட்ட குழு ஒன்று இலங்கை வந்தடைந்தது!

15
0

இலங்கையுடன்  பாதுகாப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்காக அமெரிக்காவின் 20 பேர் அடங்கிய குழுவொன்று இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளது.

இந்தோ பசுபிக்கின் பாதுகாப்பிற்கான அமெரிக்காவின் முக்கிய அதிகாரியொருவரையும் உள்ளடக்கிய குறித்த அமெரிக்க குழுவினர் நேற்றிரவு போயிங் சி-17 குளோப்மாஸ்டர் என்ற விமானத்தில் இலங்கை வந்துள்ளனர்.

இவர்களின் வருகையை முன்னிட்டு கொழும்பு விமானநிலையத்திலும் சுற்றியுள்ள பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.