யாழ்ப்பாணம் பரந்தன் வயல்வெளியில் இன்று (12) நடைபெற்ற வடக்கு நெல் அறுவடை செய்யும் நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இலங்கைக்கு உணவு வழங்கக்கூடிய மாகாணமாக வட மாகாணமும் யாழ்ப்பாண மாவட்டமும் அபிவிருத்தி செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.
மேலும், ஒரு கிலோ நெல்லை அரசாங்கத்தின் ஊடாக நூறு ரூபா வீதம் உத்தரவாத விலையில் கொள்வனவு செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
வயல் நிலங்களை பார்வையிட்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விவசாயிகளையும், அங்கிருந்த மக்களையும் அருகே அழைத்து சகஜமாக உரையாடி அவர்களோடு புகைப்படமும் எடுத்து, இளனீரும் வாக்கி குடித்து மக்களில் ஒருவராக தன்னை அடையாளப்படுத்தி சென்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.