
புத்தளம் கற்பிட்டி கண்டகுழி பகுதியில் இன்று (11) அதிகாலை திடீரென சுமார் 12 திமிங்கலங்கள் உயிருடன் கரையொதிங்கியுள்ளன.
இவ்வாறு கரையொதிங்கிய திமிங்கலங்களை கண்டகுழி வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கற்பிட்டி விஜய கடற்படையினர் மற்றும் கிராம மக்கள் இணைந்து கடும் பிரியத்தனத்திற்கு மத்தியில் திமிங்கலங்களை கயிறுனால் கட்டி இயந்திரப்படகு மூலம் இழுத்துக் கொண்டுச் சென்று கடலின் ஆழமான பகுதியில் விடுவித்தனர்.
இதன்போது மூன்று திமிங்கலங்கள் உயிரிழந்துள்ளதாகவும், உயிரிழந்த 3 திமிங்கலங்களங்களையும் பிரேத பரிசோதனைக்கு உற்படுத்தப்பட உள்ளதாக கண்டகுழி வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.