யாழ்ப்பாணம் – பண்ணை கடலில் பெண் ஒருவரது சடலம் மிதந்தவாறு இன்று பிற்பகல் கரையொதுங்கியுள்ளது.
யாழ்ப்பாண பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதகவலின் அடிப்படையில் பண்ணை கடற்கரைக்கு சென்ற பொலிஸார் சடலத்தை பொறுப்பேற்றதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த சடலம் யாருடையது என இதுவரை இனங்காணப்படாத நிலையில், நீதவானின் நேரடிப் பார்வைக்கு பின் யாழ், வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கு பிரேத அறையில் வைக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.