Home செய்திகள் மன்னாரிலும் இலங்கையின் 75 வது சுதந்திர தினத்திற்கு எதிரான கரிநாள் போராட்டம்!

மன்னாரிலும் இலங்கையின் 75 வது சுதந்திர தினத்திற்கு எதிரான கரிநாள் போராட்டம்!

23
0

மன்னார் மாவட்டத்திலும் இலங்கையின் 75 வது சுதந்திர தினத்திற்கு எதிரான கரிநாள் போராட்டம் இன்றைய தினம் சனிக்கிழமை (04) முன்னெடுக்கப்பட்டது.

தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில், சுதந்திர தின கொண்டாட்டம் இடம் பெற்ற மாவட்ட செயலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டிருந்த குறித்த போராட்டத்தில் அருட்தந்தையர்கள்,இளைஞர்கள்,காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள்,தமிழ் உணர்வாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கறுப்பு கொடிகளை ஏந்தியவாறு கைகளை சங்கிலியால் கட்டி ,வாய் மற்றும் மூக்குகளை கறுப்பு துணிகளால் மூடிய படி பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளுடன் சுதந்திர தினத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமையை காணமுடிந்தது.