நாட்டில் அடையாளம் காணப்பட்ட தொழுநோயாளிகளில் 10 வீதமானோர் சிறுவர்கள் என கண்டறியப்பட்டுள்ளதாக, கொழும்பு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சந்தன கஜநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று (29) உலக தொழுநோய் தினத்தை முன்னிட்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நாட்டில் வருடாந்தம் சுமார் 2,000 தொழுநோயாளிகள் பதிவாகுவதாகவும் கூறிய அவர் தொழு நோய் ஏற்பட்ட ஒருவரின் உடலில் நீண்ட காலமான வெள்ளை அடையாளம் மட்டும் காணப்படுவதால் அதனை அவர்கள் நோயாக கருதி செயற்படுவதில்லை எனவும் தெரிவித்தார்.