Home செய்திகள் மீற்றர் வட்டி விவகாரம் – அடித்து துன்புறித்தியவர் உட்பட ஐவர் கைது!

மீற்றர் வட்டி விவகாரம் – அடித்து துன்புறித்தியவர் உட்பட ஐவர் கைது!

16
0

யாழ்ப்பாணத்தில் மீற்றர் வட்டிக்கு பணம் கொடுத்தவர்களிடம் பணத்தை மீள வசூலிப்பதற்காக அடித்து துன்புறுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய நபர் உள்ளிட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

அவர்களின் முதன்மை சந்தேக நபர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு வரும் பெப்ரவரி 10ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மேலும், அவருடன் தொடர்புடைய முச்சக்கர வண்டி சாரதி உள்ளிட்ட ஐவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் சுன்னாகத்தைச் சேர்ந்த ஒருவர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் நேற்று சரணடைந்துள்ளார் என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.

மீற்றர் வட்டிக்கு பணம் பெற்றவர்களை தோட்டக் காணி ஒன்றுக்கு அழைத்து வந்து கொடூரமாகத் தாக்கி துன்புறுத்தும் காணொளி காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வந்த நிலையில், பணத்தை மீள வசூலிப்பதற்காக வர்த்தகர்களை அடித்துத் துன்புறுத்தும் இருபதற்கும் மேற்பட்ட காணொளிகள் பொலிஸ் உயர்மட்டத்துக்கு அனுப்பப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே அவற்றினை அடிப்படையாகக் கொண்டு, சந்தேகநபரை கைது செய்ததாக யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் குறிப்பிட்டனர்.