படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர்களை நினைவுகூரும் வகையில், கறுப்பு ஜனவரி நினைவேந்தல் நிகழ்வு, கொழும்பு விஹாரமாதேவி பூங்காவில் நேற்று மாலை இடம்பெற்றது.
இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் கறுப்பு ஜனவரி என்ற தொனிப்பொருளில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இந்நிகழ்வில் காணமாலாகப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலியகொடவின் மனைவி சந்தியா எக்னெலியகொ, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கலந்துகொண்டனர்.