நோரோ வைரஸ் தாக்கம் இங்கிலாந்தில் வேகமாகப் பரவிவருவதால் மருத்துவமனைகள் விரைவில் நிரம்பும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக இங்கிலாந்தின் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நோய் தாக்கத்தால் வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் மிகவும் ஆபத்தில் உள்ளதாகவும், நாள் ஒன்றுக்கு சராசரியாக 371 பேர் இந்த வைரசின் தாக்கத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ள அவர்கள், இந்த எண்ணிக்கை கடந்த வாரத்தை விட 8 விழுக்காடு அதிகம் என்று குறிப்பிட்டுள்ளனர்.